தென் டுனெடின் (South Dunedin) தம்பதியை 2018 ஜனவரியில் கொலை செய்த குற்றத்தை நபர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

49 வயதான டேவிட் இயன் கிளார்க் மற்றும் 35 வயதான அனஸ்தேசியா மார்கரெட் நேவ் ஆகியோர் வெஸ்லி செயின்ட் (Wesley St)  வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்து கிடந்தனர்.

இந்நிலையில் டுனெடினில் உள்ள உயர்நீதிமன்றத்தில், வைரேமு பால் நமனா என்ற நபர் இரண்டு கொலை மற்றும் ஒரு தீ விபத்து ஆகிய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் தண்டனைக்கு அவர் ஆஜராகுவார் என்று நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.