ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் அற்புதமாக ஆடினர். டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் 40 ரன்கள் கூடுதலாக எடுத்ததாக நினைக்கிறேன் என தெரிவித்தார்.