இலங்கை

2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகப் கிண்ண போட்டி இந்தியாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்றையதினம் ஹைதராபாத் மைதானத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் விளையாடினர்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி 122 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் மைதானத்தில் இருந்து திரும்பியபோது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.