வைகாடோவில் உள்ள Thames என்ற இடத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

திங்கட்கிழமை நண்பகலுக்கு முன்னதாக Banks தெருவுக்கு அருகில் உள்ள மாநில நெடுஞ்சாலை 5 இல் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக மாநில நெடுஞ்சாலை 25 மூடப்பட்டது.

சாலை பல மணி நேரம் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வாகன ஓட்டிகள் அப்பகுதியைத் தவிர்க்கவும், தாமதத்தை எதிர்பார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்