இன்று பிற்பகல் North Island இன் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Tauranga, New Plymouth மற்றும் Manawatū-Whanganui இல் உள்ள 2300 க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் உள்ளன.

ஹமில்டனில், 600 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, கிழக்கு Bay of Plenty இல் 580 வீடுகள் மற்றும் மேற்கு மற்றும் வடக்கு ஆக்லாந்தில் பல வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளன.

பலத்த காற்று வைகாடோ, Bay of Plenty மற்றும் ஆக்லாந்தில் மின் இணைப்புகள் மற்றும் மரங்களை வீழ்த்தியது.

Taumarunui, Taupō, Hawke's Bay, Taihape, Whanganui, Manawatū மற்றும் Taranaki ஆகியவற்றிற்கு வலுவான காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடுமையான காற்று வீசியதால், ஆக்லாந்து துறைமுகப் பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டது.

ஆக்லாந்தில் பலத்த காற்று சனிக்கிழமை மதியம் மற்றும் மாலை முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் தெற்கே, வெலிங்டனில் சனிக்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதிக எண்ணிக்கையிலான மின்னல் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை, இரண்டு மணி நேரத்தில் 1000 க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டன.

காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை நாடு முழுவதும் 1300 மின்னல் தாக்குதல்களை அவதானித்ததாக MetService தெரிவித்துள்ளது.

பெரும்பாலானவை தென் தீவின் மேற்கு கடற்கரையிலும் Tasman கடலிலும் பதிவாகியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்