திங்கட்கிழமை Dunedin இல் உள்ள ஒரு வீட்டில் பஞ்சாப் சமூக உறுப்பினர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

27 வயதான குர்ஜித் சிங் கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் Liberton புறநகரில் உள்ள Hillary தெருவில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் கூர்மையான பொருளால் குத்தப்பட்ட பல காயங்களின் விளைவாக அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீட்டில் பொலிஸார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒடாகோ பஞ்சாபி அறக்கட்டளையின் உறுப்பினர் நரிந்தர்வீர் சிங் கூறுகையில்

குர்ஜித் சிங்கை கொலை செய்தவர் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டும், ஏனென்றால் இதுபோன்ற மிருகங்கள் நம்மைச் சுற்றித் திரிவதை நாங்கள் விரும்பவில்லை.

அவர் வேறு யாரையும் காயப்படுத்தலாம். அது நம் அன்பான குடும்பங்களில் யாராகவும் இருக்கலாம்.

எனக்கு இந்திய சமூகத்தைப் பற்றி மட்டும் கவலை இல்லை , அந்தப் பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் நான் கவலைப்படுகிறேன் என அவர் தெரிவித்தார்.

குர்ஜித் சிங் மரணம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் உறுதி செய்தனர்.

ஞாயிறு அல்லது திங்கட்கிழமைகளில் Hillary தெருவில் சந்தேகத்திற்கிடமான எதையும் பார்த்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்