திருடப்பட்ட கார்களை ஆபத்தான முறையில் ஓட்டிய ஐந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Papakura வின் Battalion Drive இல் நேற்றிரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு அறிக்கையில், Counties Manukau இன்ஸ்பெக்டர் மாட் ஹோய்ஸ், இரண்டு வாகனங்களை சிறுவர்கள் ஆபத்தான முறையில் ஓட்டியதுடன், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாகவும் கூறினார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தபோது ​​சம்பந்தப்பட்ட வாகனங்களில் ஒன்று திருடப்பட்ட வாகனம் என்பதை அடையாளம் கண்டனர் என ஹோய்ஸ் கூறினார்.

குறித்த வாகனங்களை‌ பொலிஸார் நிறுத்த முயன்றனர்.

வாகனத்தை கண்காணிக்க பொலிஸ் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வாகனங்கள் மடக்கிப் பிடித்த பொலிஸார் உடனடியாக 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனைவரும் இளைஞர் உதவிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்