Port Waikato கடலில் பாறை ஒன்றில் சிக்கிக் கொண்ட இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் Sunset கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மீட்பு பணியாளர்கள் மீட்புக் கப்பலில் அவர்களை அடைய முயன்றனர், ஆனால் கடுமையான அலைகள் தாக்கியதால் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

இதனையடுத்து ஆக்லாந்து வெஸ்ட்பேக் மீட்பு ஹெலிகாப்டர் மதியம் 1.20 மணியளவில் இரண்டு பேரையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது.

செய்தி நிருபர் - புகழ்