Christchurch மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட கும்பல் சண்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு 8.15 மணியளவில் காத்திருப்பு அறையில் நான்கு Mongrel Mob கும்பல் உறுப்பினர்கள் தகராறு செய்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவர் தாக்கப்பட்டதாகவும் மற்றொருவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த சண்டையில் மருத்துவமனை ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என Te Whatu Ora Waitaha Health Canterbury தெரிவித்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்