Ōpōtiki க்கு கிழக்கே, Beach சாலைக்கும் Tirohanga சாலைக்கும் இடையில், மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் மாநில நெடுஞ்சாலை 35 இன்று இரவு மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.

விழுந்த மரங்களை அகற்றும் முயற்சிகள் நாளை காலை நடைபெறும் என்று Waka Kotahi இன்று பிற்பகல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மாற்றுப்பாதை எதுவும் இல்லை.

முந்தைய ட்வீட்டில், Waka Kotahi , பயணிகள் "இப்பகுதியைத் தவிர்க்க வேண்டும் அல்லது உங்கள் பயணத்தை தாமதப்படுத்த வேண்டும்" என்று கூறியது.

இந்த நெடுஞ்சாலை ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கேப்ரியல் சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Kawerau விற்கு கிழக்கே உள்ள Bay of Plenty பகுதி மற்றும் Ruatoria வின் வடக்கே Gisborne ஆகிய பகுதிகளில் இன்று ஆரஞ்சு நிற கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே கனமழை காரணமாக நீரோடைகள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் வேகமாக உயரக்கூடும் என்று MetService தெரிவித்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்