கனடாவின் மேற்கு எல்லையிலுள்ள பிராந்தியமன பிரிட்டிஷ் கொலம்பியாவில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதி பெரும்பாலும் பெரிய, நீளமான நதிகள் மற்றும் அதிகளவில் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் பரந்த மலைத்தொடரை உள்ளடக்கியதாகும்

இங்கு திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி, மளமளவென பரவ தொடங்கியுள்ளது.

இந்த திடீர் தீ விபத்து காரணமாக அந்த பிராந்தியம் முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 36 ஆயிரம் பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரத்தில் தீ பரவுவதால் 2 ஆயிரத்து 400 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளன.

இதே போல் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ பரவி வருகிறது. அங்கு வசிக்கும் பலர் கார்கள் மற்றும் விமானங்கள் ஊடாக வௌியேறி வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு வசிக்கும் 20 ஆயிரம் பேரில் 19 ஆயிரம் பேர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர்.

எஞ்சியுள்ளவர்களில் உதவிக்குழுவை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் வெளியேற சொல்லி சுற்றுச்சூழல் அமைச்சரான ஷேன் தாம்ப்சன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த கனடாவுக்கு அனுப்பப்பட்ட நியூசிலாந்து தீயணைப்பு வீரர்கள் குழு இன்று நாடு திரும்பியுள்ளது.

நியூசிலாந்து கனடாவில் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடுவதற்கு தீயணைப்பு மற்றும் அவசரநிலை, பாதுகாப்புத் துறை மற்றும் வனவியல் நிறுவனங்களில் இருந்து 92 தீயணைப்பு வீரர்களை அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்