ஆக்லாந்தில் பேருந்து ஓட்டுநர் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக ஆக்லாந்து போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆக்லாந்தில் உள்ள பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான 2306 ஓட்டுநர்களில் 578 பேர் குறைந்துவிட்டனர்.

இந்நிலையில் AT மெட்ரோ ஆப்டிமைசேஷன் மேலாளர் ரிச்சர்ட் ஹாரிசன், ஓட்டுநர் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவர உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஆட்சேர்ப்பு செய்ததாகக் கூறினார்.

பஸ் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த செய்தி என்று ஹாரிசன் வர்ணித்தார்.

அடுத்தபடியாக படகு சேவையையும் அதே திறனுக்கு கொண்டு வருவதே அடுத்த நோக்கம் என்று ஹாரிசன் கூறினார்.

பேருந்து ஓட்டுநர் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் கற்றுக்கொண்ட அதே பாடங்களைப் பயன்படுத்தி படகு ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹாரிசன் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்