Tauranga வில் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன பெண் ஒருவர், Wairere நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜூட் காக்ஸ்ஹெட் என்ற 62 வயதான குறித்த பெண்மணி ஆகஸ்ட் 12 சனிக்கிழமையன்று Tauranga வில் கடைசியாக காணப்பட்டார்.

அடுத்த நாள் அவர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அவரது வாகனம் திங்கட்கிழமை வைகாடோவின் Kaimai மலைத்தொடரில் உள்ள Wairere நீர்வீழ்ச்சி கார்பார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் இன்று தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மரணம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை எனவும், மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காக்ஸ்ஹெட்டைக் கண்டுபிடிக்க உதவிய தகவல்களை வழங்கிய பொதுமக்களுக்கு பொலிஸார் நன்றி தெரிவித்தனர்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கு பொலிஸார் ஆறுதல் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்