ஆக்லாந்தில் இருந்து Whangārei வரை இரண்டு நாட்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு இளைஞர் குழு கைது செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அதிகாலையில் இருந்து Northland இல் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மூன்று திருட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல் ஆக்லாந்தில் உள்ள இரண்டு உணவகங்களிலும் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் Whangārei இல் உள்ள அதிகாரிகள், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களைக் கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று Whangārei இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்