Gisborne இன் Tūranganui ஆற்றில் நேற்றைய தினம் இரவு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இரவு 8.20 மணியளவில் இந்த  சம்பவம் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்