ஆக்லாந்தில் நேற்றைய தினம் இரவு அதிவேகத்தில் பயணித்த ஒரு வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்ததை அடுத்து வாகனத்தை நிறுத்தாது சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆக்லாந்தின் தெற்கு நெடுஞ்சாலையில் இரவு 8.20 மணியளவில் இந்த வாகனம் அதிவேகத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மேற்கு ஆக்லாந்தில் உள்ள Henderson இல் வாகனத்தை கைவிட்டு விட்டு மூன்று பேர் கால் நடையாக தப்பி சென்றதை பொலிஸார் அவதானித்தனர்.

அவர்களில் 30 மற்றும் 59 வயதுடைய இருவர், குடியிருப்பு வளாகம் ஒன்றில் போலீஸ் நாய்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் இன்று Waitākere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்