வைகாடோ பிராந்தியத்தின் Cambridge நகரத்தில் உள்ள St Peter's பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஒருவர், பாலியல் வன்கொடுமை தொடர்பான காவல்துறை விசாரணையை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

73 வயதான அந்த நபர், ஏழு பேரிடம் அநாகரீகமான தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் இன்று ஹமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

1974 முதல் 1980 வரையிலான காலகட்டத்தை மையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

St Peter's பள்ளி நிர்வாகம் இந்த விசாரணை தொடர்பில் அறிந்திருந்ததாகவும் அவர்கள் இந்த விசாரணைக்கு
ஆதரவாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.