வெலிங்டனில் ஆயுதமேந்திய குற்றத்தடுப்பு அதிகாரிகள் உட்பட காவல்துறை அதிகாரிகள் இன்று காலை புறநகர்ப் பகுதி ஒன்றை சுற்றிவளைத்த பின்னர் பொலிஸாரால் தேடப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதுடைய நபர் மதியம் 12.45 மணியளவில் Khandallah என்ற இடத்தில் உள்ள Mandalay Terrace என்ற பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொள்ளை, பிணை மீறல், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவ இடத்தில் வாகனம் ஒன்றின் பக்கவாட்டில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தது போல் காணப்பட்டதை அடுத்து குறித்த வாகனம் தடயவியல் பரிசோதனைக்காக இழுத்து செல்லப்பட்டுள்ளது.