நியூசிலாந்து முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆக்லாந்தில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என மெட் சர்வீஸ் எச்சரித்துள்ளது. 

North Shore, மத்திய ஆக்லாந்து மற்றும் தெற்கு ஆக்லாந்தில் இரவு 7 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் ஆக்லாந்தில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று MetService கூறியது.

வெள்ளம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆலங்கட்டி மழை பயிர்கள், பழத்தோட்டங்கள் மற்றும் கொடிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் வாகனம் ஓட்டும் நிலைமைகளை அபாயகரமானதாக மாற்றலாம் என MetService கூறுகிறது.

South Island இன் Canterbury இல் இரவு 9 மணி முதல் கனமழை எச்சரிக்கையை MetService விடுத்துள்ளது.

வடக்கு ஒடாகோவிலும் இரவு 11 மணி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டனீடினில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி வரை கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.