Christchurch இன் வடக்கே ஏற்பட்ட ஒரு பாரிய காட்டுத் தீயை கட்டுப்படுத்த பல தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக Christchurch இன் வடக்கே உள்ள Pegasus கடற்கரையில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த தீ பரவல் ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் அவசரநிலை சேவைகள் தெரிவித்துள்ளது.

50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுடன் 12 டிரக்குகள் மற்றும் நான்கு தண்ணீர் டேங்கர்கள் தீ விபத்து நடந்த இடத்தில் இருந்ததாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தீ இதுவரை சுமார் 1.5 கிலோமீட்டர் நிலப்பரப்பிற்கு பரவியுள்ளதாக அவர் கூறினார்.