மத்திய ஒடாகோவில் காணாமல் போன ஒருவரைத் தேடும் காவல்துறை அதிகாரிகள் க்ளூதா ஆற்றில் இருந்து ஒரு உடலை மீட்டுள்ளனர்.

நேற்று மதியம் டீவியோட் அருகே ஆற்றில் பிணம் ஒன்று கிடந்ததை பொதுமக்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பிரேத பரிசோதனை மற்றும் முறையான அடையாளம் காணும் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், காணமல் போன 20 வயதான ரியான் வில்லியம்சன் என்ற நபர் என அவர்கள் நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பெப்ரவரி 2 ஆம் திகதி அன்று காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.