புறநகர் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு பெண் பலத்த காயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் பிலிப்ஸ்டவுனில் உள்ள Cross ஸ்ட்ரீட்டிற்கு போலீசார் வரவழைக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து 47 வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.