ஐ.பி.எல். போட்டிகளை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கொல்கத்தா அணி  வீரர்களுக்கும் சென்னை அணியில் 3 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.