தெற்கு Marlborough வில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மாநில நெடுஞ்சாலை 1ல் கெக்கரெங்கு அருகே காலை 11 மணிக்கு முன்பு இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் மிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கரெங்கு வீதியில் அருகே சாலை மூடப்பட்டுள்ளது, வாகன ஓட்டிகள் அப்பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்