ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான New Lynn இல் இன்று காலை வீடு தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலை 7 மணியளவில் Kohekohe தெருவில் அமைந்துள்ள குறித்த வீட்டில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அந்த முகவரிக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

காவல்துறையும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் இணைந்து தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டன.

செய்தி நிருபர் - புகழ்