நேற்றிரவு Palmerston North பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் உயிரிழந்ததை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு 10.25 மணியளவில் Dahlia தெருவில் உள்ள ஒரு நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாவட்ட மேலாளர் குற்றப் புலனாய்வுப் துப்பறியும் ஆய்வாளர் கிரேக் ஷெரிடன் கூறுகையில், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த சம்பவம் ஒருவருக்கொருவர் தெரிந்த தரப்பினருடன் தொடர்புடையது என்பதற்கான அறிகுறிகள் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களுக்கு இதனால் ஆபத்து இருப்பதாக நினைக்கவில்லை என்று அவர் கூறினார்.

இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.