வடக்கு ஆக்லாந்தில் ஹெட்ஹன்டர்ஸ் மோட்டார் சைக்கிள் கும்பலை இலக்கு வைத்து பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள் மற்றும் அரை தானியங்கி கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை Dairy Flat இல் உள்ள Postman வீதி முகவரியில் ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் படை சோதனையில் ஈடுபட்டது.

டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஆரோன் ப்ரோக்டர் கூறுகையில்...

இந்த நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட அரை தானியங்கி துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் ஏராளமான போதைப்பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அவற்றில் கிட்டத்தட்ட அரை கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஒரு கிலோகிராம் சூடோபெட்ரைன் ஆகியவை அடங்கும் என்று அவர் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

5000 டொலரிற்கு அதிகமான பணமும் கைப்பற்றப்பட்டது.

குறித்த முகவரியில் கும்பலைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  அவர் மீது சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் வெடிமருந்துகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அந்த நபர் நாளை Waitākere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கைய ஆபரேஷன் கோபால்ட்டின் ஒரு பகுதியாகும், இது எங்கள் சமூகங்களில் கும்பல் உறுப்பினர்களால் செய்யப்படும் சட்டவிரோத நடத்தையை குறிவைத்து சீர்குலைக்கும்" என்று ப்ரோக்டர் கூறினார்.