இன்று பிற்பகல் ஆக்லாந்தின் Bucklands கடற்கரையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சடலம் நேற்றைய தினம் படகு விபத்தின் பின்னர் காணாமல் போன நபராக இருக்கலாம் என பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஆக்லாந்தின் புறநகர் பகுதியில் சனிக்கிழமை இரவு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதை அடுத்து இரண்டு பேர் கரைக்கு வந்ததுடன் ஒரு நபர் மாயமானார்.

குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் பொலிஸார் தற்போது சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி சார்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.