க்ளென் ஈடனில் கடுமையான தாக்குதல் நடத்தியதாக கோமன்செரோஸ் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் ஒருவர் ஆக்லாந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

18 மற்றும் 24 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டு கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்  நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அனைவரும் இன்று Waitakere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Virgo place இல் இன்றும் ஒரு காட்சிப் பரிசோதனை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.