கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளிப் பாடசாலைகள், பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்படும் என முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

 

எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை இது குறித்த தீர்மானங்களை அமுல்படுத்த முடியாதுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

தேசிய முன்பள்ளி கொள்கை தொடர்பான சட்டமூலத்தை கல்வி அமைச்சர் பேராசியிர் G.L.பீரிஸிடம் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.