இலங்கையில் ,வட மாகாணத்தில் கொவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வட மாகாண கல்வித் திணைக்களம் ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்காக மாணவர்களை ஒருங்கிணைத்து நடாத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி எதிர்வரும் 31.05.2021 வரை வகுப்பறைகளிலேயே காலை நேர பிரார்த்தனைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.