அறியப்படாத ஒரு பொருளை எடுத்துக்கொண்டதால் அது எதிர்வினையாற்றியதன் பின்னர் மூன்று பேர் ஆபத்தான நிலையில் ஆக்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெடரல் தெருவில் (Federal Street) உள்ள ஸ்கை டவரின் (Sky Tower) அடிவாரத்தில் காலை 8.30 மணிக்கு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.

தீவிர சிகிச்சைக்காக துணை மருத்துவர்களும் அனுப்பப்பட்டனர், மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மூவரும் அறியப்படாத ஒரு பொருளை எடுத்துக் கொண்டதாகவும்,அதன் பின்னரே இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.