கடந்த மாதம் நார்த்லேண்டில் நடந்த (Northland) துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்

கடந்த மாத தொடக்கத்தில் நார்த்லேண்ட் நகரமான காமோவில் (Kamo) துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mongols மோட்டார் சைக்கிள் கும்பல் நடத்திய குறித்த தாக்குதலின் விசாரணையின் பின்னர் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் ஆபத்தான செயலைச் செய்வது, தீக்குளித்தல் மற்றும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவில் பங்கேற்பது ஆகியவை போன்ற பல கடுமையான குற்றங்களை பொலிசார் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 17 மற்றும் 18 வயதுடைய இருவரும் கிறிஸ்ட்சர்ச்சில் (Christchurch) உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள், 43 மற்றும் 49 வயதுடைய இருவர் வாங்கேரேயில் ஆஜரானார்கள்.

மேலும் கிறிஸ்ட்சர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட தேடலில் மெத்தாம்பேட்டமைன் (methamphetamine - ஒருவகை போதைப்பொருள் ) மற்றும் 50,000 டொலரிற்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.