தில்வொர்த் பள்ளியில் பணிபுரிந்தபோது வரலாற்று பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர் இரண்டு குற்றச்சாட்டுகளின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்று காலை ஆக்லாந்து உயர்நீதிமன்றத்தில், கிரேம் லிண்ட்சே என்ற நபர் 1970 இல் இருவர் மீது அநாகரீகமான தாக்குதல் நடத்தியதாகவும் மற்றும் அவர் மீது சுமத்தப்பட்ட  பாலியல் குற்றச்சாட்டு ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

தில்வொர்த்தில் நடந்த வரலாற்று பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் லிண்ட்சேவும் ஒருவர்.

அவர்கள் அநாகரீகமான தாக்குதல் மற்றும் சட்டவிரோத பாலியல் தொடர்பு, மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.