கொரோனா தொற்றினால் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்க வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஆக்சிஜன் செறிவூக்கிகளை நன்கொடையாக வழங்கி உதவி புரிந்தார்.

ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை குருகிராம் காவல்துறையினரிடம் நன்கொடையாக வழங்கினார் ஷிகர் தவான்.

சமீபத்தில் கொரோனா முதல் தடுப்பூசில் செலுத்திக் கொண்ட தவான் ஏற்கெனவே கொரோனா நிவாரணத்துக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினார். இது போக, ஐபிஎல் 2021 தொடரில் இவர் ஆட்ட நாயகன் விருதுகள் உள்ளிட்ட அதன் மூலம் கிடைத்த தொகைகளையும் கொரோனா நிவாரணத்துக்கு நன்கொடையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.