கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை உரிய திகதி நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்த இறுதி தீர்மானம் இரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீறிஸ் தெரிவித்தார்.

 

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

 

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

குறித்த தினத்தில் பரீட்சையை நடத்துவதா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்த இறுதி தீர்மான த்தை 2 நாட்களுக்குள் எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால் , மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக மேலதிகமாக 6 வாரக் காலம் வழங்கப்படும்.

 

அத்தோடு பரீட்சையை நடத்த புதிய திகதி அறிவிக்கப் படும்.

 

குறித்த காலப்பகுதியில் 11 ஆம் தர மாணவர்களின் பாடத் திட்டம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான விசேட நடவடிக்கை கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப் படும் என அவர் மேலும் தெரிவித்தார்.