கொரோனா தொற்றால் ஆபத்து ஏற்பட்டால் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை திட்டமிட்டப்படி பரீட்சை நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானம் ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பாகப்    
பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஜி.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.