பிராஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பான 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர், சவுதி மன்னர், எகிப்து அதிபர், பாகிஸ்தான் அதிபர் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் மாநாட்டில் கலந்துகொள்ள நிகழ்ச்சி நடைபெற்றும் பகுதிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் ஷெரிப் காரில் வந்தார்.

அவர் காரை விட்டு கீழே இறங்கியபோது அப்பகுதியில் மழை பெய்துகொண்டிருந்தனர்.

அப்போது அவரை வரவேற்க பெண் அதிகாரிகள் நின்றுகொண்டிருந்தனர்.

அதில் ஒரு பெண் அதிகாரி குடை பிடித்தபடி பாக்கித்தான் பிரதமர் ஷபாஷ் உடன் நடந்து சென்றார்.

அப்போது திடீரென அந்த பெண் அதிகாரியிடமிருந்து குடையை வாங்கிய பாக்கிஸ்தான் பிரதமர் பெண் அதிகாரியை தனியே கொட்டும் மழையில் விட்டுவிட்டு நடந்து சென்றார்.

இதனால் செய்வதறியாது திகைத்த பெண் அதிகாரி கொட்டும் மழையில் பரிதவித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.