ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Sandringham இல் இடம்பெற்ற Dairy Shop கொள்ளை சம்பவத்தில் உயிரிழந்த ஜனக் படேலின் குடும்பத்திற்காக 100,000 டொலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 23 ஆம் திகதி அன்று அவர் இறந்ததிலிருந்து 2000 க்கும் மேற்பட்டவர்கள் நன்கொடைகளை வழங்கினர்.

இந்த நிதி சேகரிப்பின் வெற்றி சமூகத்தின் ஒற்றுமையைக் காட்டுகிறது என்று வணிகத் தலைவர்கள் தெரிவித்தனர்.

Dairy மற்றும் வணிக உரிமையாளர்கள் குழுமத்தின் தலைவர் சன்னி கவுஷல் கூறுகையில், சமூகம் ஒன்று திரண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

படேலின் குடும்பத்தை ஆதரிப்பதற்காக Givealittle பக்கத்தில் திரட்டப்பட்ட இந்த நிநி அவரது மனைவி மற்றும் வயதான பெற்றோருக்கு வழங்கப்படும்.

இது கிவீஸ் அக்கறையை காட்டுகிறது என்று கவுஷல் கூறினார்.

"கிவிஸ் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்கிறார்கள், அவர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர், நாங்கள் எல்லோரும் ஒன்று." என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனக் படேலின் குடும்பத்திற்கான நிதி சேகரிப்பு நாளை முடிவடைகிறது.