Tokoroa அருகே‌‌ இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் மாலை 6.07 மணியளவில் Tokoroa வில் இருந்து தென்கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதுடன் 159 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜியோநெட் தெரிவித்துள்ளது.

சுமார் 9283 பேர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை இரவு 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் Taupō ஐத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.