நேப்பியரில் உள்ள Marewa என்ற இடத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Nuffield Avenue வில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 4.25 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். 

குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர் என்று நம்பும் ஒருவரைக் கண்டுபிடிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இந்த மரணத்தில் ஆயுதம் ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை கூற மறுத்துவிட்டனர்.