நேற்றிரவு ஆக்லாந்தில் காவல்துறை அதிகாரியை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாக்கி கடுமையாக காயப்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

நேற்று இரவு 7.20 மணியளவில் திருடப்பட்டதாகக் கூறப்படும் வாகனத்தை பொலிஸார் கண்காணிக்கத் தொடங்கிய நிலையில் குறித்த வாகனத்தை நிறுத்த முற்பட்ட காவல்துறை அதிகாரியை வாகனம் மோதியது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 37 வயதான நபர் கைது செய்யப்பட்டு, கடுமையான உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் காயப்படுத்துதல், மோட்டார் வாகனத்தை நிறுத்தத் தவறியது மற்றும் மோட்டார் வாகனத்தை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அந்த நபரின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான தற்காலிக அனுமதியை Manukau நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மேலும் இம்மாத இறுதியில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.