ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Remuera என்ற இடத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் 1.30 மணியளவில் Rangitoto Avenue வில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இச் சம்பவத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து தீவிர விபத்து பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.