ஞாயிற்றுக்கிழமை காலை Rotorua வில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பொலிஸார் கொலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Kawerau வை சேர்ந்த 28 வயதான கொரே ரோஸ் வைமன் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.55 மணியளவில் Mourea வில் உள்ள மாநில நெடுஞ்சாலை 33 க்கு அவர்கள் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் வாகனத்திற்குள் பயணித்த வைமன், பலத்த துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டார்.

வைமன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

"இந்த கடினமான நேரத்தில் குறித்த பெண்ணின் குடும்பத்துடன் காவல்துறை ஆதரவுடன் செயல்படுகிறது " என்று டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் லிண்ட்சே பில்ப்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு கோப்பு எண் 220925/5119 ஐ மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.