மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிறிஸ்ட்சர்ச்சில் இடம்பெற உள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கும் கதீட்ரல் டீன், கிறிஸ்ட்சர்ச் குடியிருப்பாளர்கள் ராணியை அன்புடன் நினைவில் கொள்கிறார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.

ராணியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை கார்டன் சிட்டியில் நடைபெறவுள்ளது.

குறித்த கட்டிடத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக மக்கள் பிரவேசிக்கும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே நினைவேந்தல் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நேரடி ஒளிபரப்பு இணைப்பு கதீட்ரல் வலைத்தளத்திலும் சேவைத் தளத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு மாலை 5 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.