நேற்றைய தினம் ஆக்லாந்து பல்பொருள் அங்காடிக்கு வெளியில் இருந்து நாய் ஒன்று திருடப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை மிஸ்டி என்ற குறித்த நாய் தனது உரிமையாளர்களுடன் மீண்டும் இணைந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

நேற்று ஒரு பல்பொருள் அங்காடியில் மிஸ்டியின் உரிமையாளர் உள்ளே ஷாப்பிங் செய்துகொண்டிருந்த போது அங்காடிக்கு வெளியே இருந்த மிஸ்டி காணமல் போனதாக பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீஸ் விசாரணைகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், இன்று மிஸ்டியை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 24 வயதுடைய பெண் ஒருவர் மீது திருட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.