நியூசிலாந்தில் மேலும் நான்கு பேர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பது ஆகும்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் அனைவரும் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மூன்று பேர் ஆக்லாந்திலும், ஒருவர் South Island இலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.