ஆக்லாந்து புறநகர் பகுதியான Panmure இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இரவு 10 மணியளவில் Oran வீதியில் இடம்பெற்ற குறித்த சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தோட்டாக்களால் இரண்டு ஜன்னல்கள் சேதமடைந்தது இருந்ததை கண்டனர்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.