Tauranga வில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் 39 வயதான ஒரு நபர் மற்றும் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ‌Tauranga தெற்கு குற்றப்பிரிவு தலைவர் டிடெக்டிவ் சார்ஜென்ட் மாட் ஸ்மித் கூறுகையில்..

ஜூலை 20 மற்றும் 23 க்கு இடையில் இந்த குழுவானது Grey Street இல் ஒரு திருட்டு மற்றும் Eleventh Avenue வில் இடம்பெற்ற ஒரு கொள்ளையுடன் தொடர்புடையது. இவை இரண்டும் Tauranga வில் இடம்பெற்றவை ஆகும் என தெரிவித்தார்.

மேலும் இவர்களில் இரண்டு இளைஞர்கள் கடந்த ஜூலை 26 ஆம் திகதி அன்று நடந்த இரண்டு திருட்டு சம்பவங்களுடன்  தொடர்புடையவர்கள் என ஸ்மித் கூறினார்.