நியூசிலாந்தில் நான்காவது நபர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்தது.

அந்த நபர் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பியதாகவும் அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது Te Waipounamu வில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த நபரிடம் இருந்து சமூகத்திற்கு பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமைச்சகம் கூறுகிறது.

இந்த நபர் மற்றும் அவர்களது தொடர்புகளின் தனியுரிமையைப் பாதுகாக்க, இந்த நிலையில் மேலதிக தகவல் எதுவும் வெளியிடப்படாது எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.